Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

கிறிஸ்துவம் – Christianity

Christianity - Jesus Christ

Story Highlights

  • விழித்தெழும் நேரமிது!
  • நிச்சயம் இது மத பிரசாரப் பதிவல்ல!!
  • உண்மையை உணருங்கள்!!!

மறுப்பு

  • இந்தப் பதிவுகள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கரையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

Thanks

கிறிஸ்துவம்

உலகின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதம்! நாம் இப்பதிவை இங்கு இப்போது இடுவதற்கான காரணம் இறுதியில் உரைக்கிறேன்!

நன்றி!

நாம் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எமது பள்ளிக்காலங்களிலேயே சில விஷயங்களை அறிந்திருந்தாலும் பதிவின் பொருட்டு நிறைய வலைதளங்களிலிருந்து படங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தியுள்ளோம். அவற்றில் முக்கியமாக விக்கிபீடியா தளத்திலிருந்து பெரும்பான்மையாக பயன்படுத்தியுள்ளோம். அத்தளத்திற்கு நன்றி!

 

கிறிஸ்துவம் என்ற சொல்லின் பொருள் ஆசிர்வதிக்கப்பட்டது; புனிதமானது.

 

உலகின் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் மதம் பற்றி அறிய வலைகளில் நிலையான தெளிவான தகவல்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

 

இருந்தாலும் யாம் எம் சிற்றவிற்க்கேட்ப திரட்டிய விஷயங்களை பகிர்கிறேன்!

 

கிறிஸ்துவம்

இம்மதம் தோன்றிய தேசம் இஸ்ரேல், தற்போதைய பாலஸ்தீனம். கிறிஸ்துவத்தை புரிந்துகொள்ள அதன் நதிமூலம் தெரிந்திருக்க வேண்டும்.

 

நதிமூலம்

இஸ்ரேலின் பிரதான மதம் – சமயம், யூதம் (JUDAISM) ஆகும். யூதர்களின் புனித நூல் ‘தனக்’ (TANAK). யூத மதம் போதிப்பது என்னவென்றால், கடவுள் ஒருவரே! அவரோடு நேரடியாக தொடர்புடையவர்கள் யூதர்களே! இப்பூமியில் இஸ்ரேலே ஆசீர்வதிக்கப்பட்ட தேசம். யூதர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்று அம்மதத்தில் ஒரு ஏற்பாடு இருந்தது. அதை யூதர்கள் கடைப்பிடித்து வந்தனர். அதைப் பழைய ஏற்பாடு என்று கூறுவர். (OLD TESTAMENTS)

யூதர்களின் தலைவர் ஆபிரகாம் கடவுளுடன் நேரடியாக உரையாடக் கூடியவர். மக்களுக்கு கடவுளின் நற்செய்திகளைச் சேர்ப்பவர் என்று யூதர்களால் நம்பப்பட்டவர். பின்னாளில் கடவுளின் அனுகிரகம் இஸ்ரேலுக்கே கிடக்கும் என்றும் உரைத்தவர்.

அப்படிப்பட்ட யூதப் பகுதியில் இயேசு (Jesus) என்பவர் பிறந்ததும் வளர்ந்ததும் கீழ்காணும் நால்வர் மூலமே அறிய முடிகிறது. மேலும் அவர்களின் வாக்குகளுங்கூட சமகாலங்களில் நடந்தவையாவென? உறுதிப்படுத்த இயலவில்லை!. அதன் ஒற்றுமைகளில், ஒற்றுமைகளின் நம்பகத்தன்மை குறித்த அக்கறை மற்றும் ஆர்வம், அதீத பக்தி காரணமாக, நவீன வரலாற்றாசிரியர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

  1. மார்க் (MARK 60 – 75 AD)
  2. மேத்யூ (MATTHEW 65 – 85 AD)
  3. ல்யூக் (LUKE 65 – 95 AD)
  4. ஜான் (JOHN 75 – 100 AD)

 

இவர்களில் மார்க், மேத்யூ மற்றும் ல்யூக் ஆகியோரின் நற்செய்திகள் ரத்னசுருக்கமாக உள்ளன. இதற்கு காரணம் மேத்யூவும் ல்யூக்கும் மார்க்கின் மொழி நடையில் பயணத்திருகக்கலாம் என்ற சந்தேகமும் அறிஞர்கள் மத்தியிலுண்டு.

 

 

இயேசு கிறிஸ்து

எப்படியாயினும், ஒருவழியாக பெரும்பான்மையாக அனைவரும் ஒத்துக்கொள்வது இதில் தான். இயேசு கிறிஸ்துவின் தந்தை பெயர் ஜோசப், தாயார் பெயர் மேரி. இயேசு, கடவுளின் பிள்ளை. கன்னி மாதாவான மேரிக்கு இறைவன் மூலமாக பிறந்தவர் இயேசு. இயேசுவின் பெற்றோர் நாசரேத் நகரில் வசித்து வந்தனர். அரச ஆணைக்கிணங்க பெத்லேஹெம் நகருக்கு வந்த போது பிறந்தவர் இயேசு. இயேசு பிறந்ததையும் அவரை தெய்வத்தின் தூதுவர்கள் கண்ட செய்தியையும்

குழந்தை இயேசு - கிறிஸ்துவம்
குழந்தை இயேசு

அவர் கடவுளின் பிள்ளை என்பதையும் அறிந்து அக்குழந்தையை கொல்ல யூத அரசர் முயன்றதையும் அச்செயதியை தேவ தூதர்கள் மூலம் அறிந்து இயேசுவின் பெற்றோர் எகிப்துக்கு தப்பிச் சென்று, பிறகு சில காலம் கழித்து, நாசரேத்திற்கே திரும்பி வந்து வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது.

மேலும் இந்நால்வரின் வாக்குகளில் ஜானின் வாக்குகள் முற்றிலும் மாறுபட்டதாகவும் சில நம்ப முடியாதவையாகவும் உள்ளன. குறிப்பாக இயேசு இறந்தது, மீண்டும் உயிர்த்தெழுந்தது மற்றும் அற்புதங்கள் நிகழ்த்தியது ஆகியவை. ஆனாலும் நற்செய்திகளின் அடிப்படையில் மக்களும் அதை ஏற்று பின்பற்றி வருவது குறிப்பிடத்தகுந்தது.

 

 

என்னதான் யூத மதத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் யூதர்களின் புனித நூலின் ஏற்பாடான பழைய ஏற்பாடும் கிறிஸ்துவ மதத்தின் புனிதமான ஏற்பாடாக கருதப்படுகிறது. கிறிஸ்துவை பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

 

 

ஜோசப்பின் மகன் கிறிஸ்து என்பதை விட மேரியின் மகன், ஜேம்ஸின் சகோதரன், ஜோசசின் சகோதரன், ஜுடாசின் சகோதரன் மற்றும் சைமனின் சகோதரன் என்றே இயேசு கிறிஸ்து அதிகம் அறியப்படுகிறார்.

 

 

ஆரம்ப காலகட்டங்களில் இயேசு கிறிஸ்தவாக அழைக்கப்பட்டவர் பின்னாட்களில் MESSIAH (ஆசீர்வதிக்கப்பட்ட தேவதூதன்) என்றுணரப்பட்டார்.

 

 

யூத மதத்திற்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் உள்ள வேறுபாடு யாதெனில், யூத மதம் ஒரு தேசத்தை பலப்படுத்தவது. ஆனால் கிறிஸ்துவம் உலகத்திற்கே பலன் அளிப்பதாக உணரப்பட்டது. அதனால்தான் இஸ்ரேலில் தோன்றிய ஒரு மதம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் செழித்து வளர்ந்துள்ளது. மேலும் கடவுள் ஒருவரே என்பது யூதக் கோட்பாடு. முப்பரிமாணமுடையவர் கடவுள் (ஒன்றில் மூன்று) என்பது கிறிஸ்துவக் கோட்பாடு.

 

 

பிரிவுகள்

நாம் இப்பதிவின் இறுதிப்பகுதியை அடைந்துள்ளோம். மற்றும் ஒரு முக்கியமான பகுதியை அடைந்துள்ளோம்.  கிறிஸ்துவ மதத்தின் புனித நூல் பைபிள். இதைப் பின்பற்றும் முறையையொட்டி கிறிஸ்துவம் மூன்றாக பிரிகிறது.

  1. கத்தோலிக் (CATHOLIC OR ROMAN CATHOLIC)
  2. கிழக்கத்திய வழக்கம் (EASTERN ORTHODOX)
  3. சீர்திருத்தவாதிகள் (PROTESTANISM)

 

1. கத்தோலிக் (CATHOLIC OR ROMAN CATHOLIC)

கத்தோலிக்க திருச்சபை அன்னை மேரி மாதாவையும் குழந்தை இயேசுவையும் வணங்குகிறது. உலகம் முழுவதும் 1.20 பில்லியன் பேர் இதைப் பின்பற்றுகின்றனர். இதன் தலைவர் ரோம் நகரின் தலைவர். அவர் போப்பாண்டவர் என்றழைக்கப்படுகிறார். கத்தோலிக்க சபை சமுதாய போதனை, நலிந்தவர்க்கு மருத்துவ உதவி, பொருளுதவி மற்றும் கருணை அடிப்படையிலான உதவிகளை உலகம் முழுவதும் அளித்து வருகின்றது.

 

 

2. கிழக்கத்திய வழக்கம் (மரபுவழி) (EASTERN ORTHODOX)

கிழக்கத்திய ஆர்த்தோடக்ஸ் சபை உலகின் இரண்டாவது மிகப்பெரிய சபையாகும். சுமார் 300 மில்லியன் பேர் இச்சபையில் உள்ளனர். இச்சபையில் அதிகமாக கிழக்கு, தென்கிழக்கு ஐரோப்பியர்கள், கிழக்கு மத்திய தரைக்கடல் தேசத்தினர் மற்றும் கருப்பு மற்றும் காஸ்பியன் கடல் தேசத்தினர் உள்ளனர். இச்சபையின் அடிப்படையானது இச்சபையும் அதன் உறுப்பினர்களும் இயேசுவின் உடல் போன்றவர்கள். ஒவ்வொருவரும் இயேசுவைப் போல் வாழ வேண்டும் என்று போதிப்பதே இதன் தனிச்சிறப்பு.

 

 

3. சீர்திருத்தவாதிகள் (PROTESTANISM)

இப்பிரிவு, நடப்பிலிருந்த ரோமன் கத்தோலிக்க சபையின் செயல்களில் இருந்த குறைகளாக அறியப்பட்டவைகளை களைந்து செயல்படுபவர்களை குறிக்கும். ஜெர்மனியின் லூதர் வழங்கிய 95 தீசெஸ் மூலமாகவும் இவ்வியக்கம் பிரபலமானது. என்றாலும்கூட மற்ற இரண்டு பிரிவுகள் போல இப்பிரிவை அறுதியிட்டுக் கூற இயலாது. ஏனென்றால் இப்பிரிவில் மேலும் பல குடும்ப உட்பிரிவுகள் உண்டு. தோராயமாக 800 மில்லியன் பேர் உலகம் முழுவதும் இப்பிரிவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

 

கிறிஸ்துவம் சொல்லும் அடிப்படைத் தத்துவம் – நம்பிக்கை

  • கடவுள் நம் தந்தை, இயேசு கிறிஸ்துவே கடவுளின் மகன், இயேசு கிறிஸ்துவே பரிசுத்த ஆவியானவர் என்பதில் நம்பிக்கை
  • கிறிஸ்துவின் மரணம், அவர் நரகம் சென்று மீண்டும் உயிர்தெழுந்தது ஆகியவற்றின் மீது நம்பிக்கை
  • சபையின் புனிதம், அருட்தொண்டர்களின் புனிதம், கிறிஸ்துவின் மறு வருகை, தீர்ப்பு நாள் மற்றும் விசுவாசமான இரட்சிப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை

 

 

இப்பதிவின் நோக்கம் பற்றி இதன் தொடர்ச்சியான அடுத்தப் பதிவில் காண்போம்! வேறொரு மதத்தோடு!!

இறைனிலை என்பது தன்னிலை அறிவதன்றி வேறில்லை!

தன்னை அறிந்தவன் இறைவனே!

 

பின்குறிப்பு: முன்பே சொல்லியிருக்க வேண்டியது! நாம் எந்த மதத்திற்கும் ஆதரவானவனும் இல்லை; எதிரியும் இல்லை! உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்கள், விளக்கங்கள், திருத்தங்கள் ஏற்கப்படும்! நன்றி!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *